டெல்லி

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையையொட்டி இன்று நாடெங்கும் உள்ள டாக்டர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்

கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கொல்கத்தா உயர்நீத்மன்ற உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வரும் இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், கொல்கத்தாவில் பயிற்சி டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிபிஐ இந்த வழக்கில், ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை. கைது செய்தது.

இக்கொலையைக் கண்டித்து உரிய நீதி வேண்டி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் உயிரிழந்த மருத்துவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் போன்ற் கோரிக்கைகளை முன்வைத்து இளநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவர்களின் போராட்டம் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த நிலையில், செப். 16ம் தேதி மருத்துவக் குழுவுடன் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் அவர்கள் கோரிக்கை முழுமையாக ஏற்கப்படவில்லை.

மருத்துவர் கொலைக்கு நீதி வேண்டி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை டாக்டர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இன்று நாடு தழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐ.எம்.ஏ.) அறிவித்திருந்தது. இன்று காலை 6 மணிக்கு மருத்துவர்கள் தொடங்கிய இந்த போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெறும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்