சென்னை: தமிழ்நாடு மகளிர் காங்கிரஸின் அனைத்து அணிகளும் கூண்டோடு கலைக்கப்படுவதாக அகில இந்திய மகிளா காங்கிரஸ் அறிவித்து உள்ளது.

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி அல்கா லாம்பா உத்தரவுப்படி, தமிழ்நாடு மகளிர் காங்கிரசின் அனைத்து அளவிலும் உள்ள மாநில, மாவட்ட, வட்ட, வட்டார, பஞ்சாயத்து, பூத் கமிட்டிகள் கலைக்கப்படுகின்றன என்று மகளிர் காங்கிரஸ் மாநில தலைவி சையத் அசினா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி அல்கா லாம்பா உத்தரவுப்படி, தமிழ்நாடு மகளிர் காங்கிரசின் அனைத்து அளவிலும் உள்ள மாநில, மாவட்ட, வட்ட, வட்டார, பஞ்சாயத்து, பூத் கமிட்டிகள் கலைக்கப்படுகின்றன. அகில இந்திய மகளிர் காங்கிரசின் சுற்றறிக்கையின்படி, உறுப்பினர் சேர்க்கையை சேர்ப்பவர்களின், புதிய கமிட்டி விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.