டெல்லி

ந்திய தூதர்கள் கனடாவ்ல் இருந்து வெளியேற்றப்பட்டதால் 6 கனடா தூதர்களை இந்தியா வெளியேற்றி உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சர்ரே நகரில் குருத்வாரா ஒன்றிற்கு வெளியே கடந்த ஆண்டு ஜூனில் சுட்டு கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு உள்ள தொடர்பு பற்றி நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளுக்கான சான்றுகள் தன்னிடம் உள்ளன என அந்நாட்டு அதிபர் ஜஸ்டின் ட்ருடோ கடந்த ஆண்டு கனடா நாடாளுமன்றத்தில் பேசும்போது குறிப்பிட்டார்.

இவற்றை இந்தியா மறுத்து உள்நோக்கத்துடன் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன என கூறியதுடன் கனடாவில், பயங்கரவாதிகளுக்கும் மற்றும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கும் இடம் அளிக்கப்படுகிறது என கனடாவை இந்தியா குற்றம்சாட்டியது.  இந்தியா மற்றும் கனடா இடையேயான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்தால் கனடாவில் இந்திய அரசின் வன்முறை பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்திய தூதர்கள் பணியாற்றினர் என்பதற்கான சான்றுகளை கனடா காவல்துறை சேகரித்து உள்ளனர் என கனடா குற்றச்சாட்டு தெரிவித்தது.

இந்திய அரசு மறுப்பு தெரிவித்து கனடாவின் தூதர் ஸ்டூவர்ட் வீலருக்கு சம்மன் அனுப்பி, அந்நாட்டிலுள்ள இந்திய தூதர் மற்றும் பிற தூதரக அதிகாரிகள் மீது அடிப்படையற்ற வகையில் குற்றச்சாட்டுகளை சுமத்துவது என்பது முற்றிலும் ஏற்று கொள்ள முடியாதது என தெரிவித்தது.

மேலும் இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா, ஜப்பான், சூடான், துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தூதராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்றும் 36 ஆண்டு காலம் தூதராக பணியாற்றிய இந்தியாவின் மூத்த அதிகாரியாவார் என்றும் மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

கனடாவில் உள்ள இந்திய தூதர்கள் 6 பேரை அந்நாட்டு அரசு வெளியேற்றி உள்ளது. கனடா தூதர்கள் 6 பேரை வெளியேற்றி இந்தியா இதற்கு பதிலடி கொடுத்துள்ளது. அதனபடி கனடாவின் தூதர், துணை தூதர் உள்ளிட்ட 6 பேரை வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) இரவு 11.59 மணிக்குள் அல்லது அதற்கு முன் இந்தியாவில் இருந்து வெளியேறும்படி தெரிவித்து உள்ளது.

அதாவது ஸ்டூவர்ட் ராஸ் வீலர், பேட்ரிக் ஹெபர்ட், மேரி கேத்தரின் ஜாலி, இயான் ராஸ் டேவிட் டிரைட்ஸ், ஆடம் ஜேம்ஸ் சுப்கா, பவுலா ஆர்ஜுவலா உள்ளிட்ட 6 பேரையும் வெளியேறும்படி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு தெரிவிக்கின்றது.