வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவு தரமாக இல்லை உணவுக்காக பெருந்தொகையை வாங்கிக் கொண்டு இப்படி பரிமாறுவது கண்டிக்கத்தக்கது என்று நடிகரும் இயக்குனருமான ஆர். பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

விமான கட்டணத்தை வாங்கிக்கொண்டு விமானத்தை போல் ரயில் விபத்துக்கான ப்ராபபிளிட்டியும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் ரயிலில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்த பார்த்திபனின் இந்த குற்றச்சாட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

சென்னையில் இருந்து கோவை செல்லும் வந்தே பாரத் ரயிலில் நேற்று பயணம் செய்த போது அவருக்கு வழங்கப்பட்ட உணவு தரமாக இல்லையென்று ரயில்வே துறைக்கு புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பார்த்திபன், “முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது.சார் அதை comment செய்ததால் உடனே இப்பதிவு.

‘வந்தே பாரத்’-தில் தந்தே உணவு தரமாக இல்லை. பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்ய கேடென சுற்றத்தார் முனுமுனுத்தார்கள். நான் complaint book-ஐ வாங்கி கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன்.

நானதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன் பெறுதல் முக்கியமென” என்று பதிவிட்டுள்ளார்.

வந்தே பாரத், சதாபத்தி போன்ற ரயில்களில் ரயில் டிக்கெட்டுடன் உணவுக்கான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது ஆனால் இந்த ரயில்களில் வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லை என்று பல்வேறு சமயங்களில் பயணிகள் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் பார்த்திபனின் இந்த குற்றச்சாட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.