சென்னை: திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதி உள்பட 4 புதிய வளாகங்களை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் .

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சயில் இந்து சமய அறநிலைத் துறையின் 4 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து,  திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதன்படி திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதி, முடி காணிக்கை மண்டபம், சுகாதார வளாகங்களை திறந்து வைத்தார். புதிய கட்டிடங்களை காணொலி மூலம் திறந்து வைத்தார். நீர்த்தேக்கத்தொட்டி மற்றும் நீரேற்று நிலையத்தையும் திறந்து வைத்தார்.  தொடர்ந்து,   இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.5.81 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.