டெல்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு முழுவதுமாக சீர்குலந்துள்ளதாக விமர்சித்துள்ளார்.

கடந்த 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட. பாபா சித்திக் உணவுத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். இவர் சமீபத்தில்காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

நேற்று மாலை பாபா சித்திக், மும்பை பாந்த்ரா கிழக்கு நிர்மல் நகர், கோல்கேட் மைதானத்திற்கு அருகில் உள்ள அவரது மகன் ஷீசான் சித்திக் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு சென்று இருந்தபோது அலுவலகம் அருகே பாபா சித்திக்கை பின்தொடர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் அவர் மீது 3 ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.

பாபா சித்திக் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மும்பை காவல்துறையினர் அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதூ குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில்,

“பாபா சித்திக்கின் சோகமான மறைவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மராட்டிய மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதை இந்த பயங்கர சம்பவம் அம்பலப்படுத்துகிறது. அரசாங்கம் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். நீதி வெல்ல வேண்டும்”

என்று பதிவிட்டுள்ளார்.