வோஸ்

ந்தோனேசிய படகு  தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் வடக்கு மலுகு தீவில் பெனி லவோஸ் மாகாணத்தில் ஆளுநர் தேர்தல் நடைபெற உள்ளது.

ஆளுநர் வேட்பாளரான பென்னி என்பவர் தனது ஆதரவாளர்களுடன் அங்குள்ள பகுதிகளுக்கு படகில் சென்று பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அந்த படகில் தீப்பிடித்தது.

படகு முழுவதும் காற்றின் வேகம் காரணமாக மளமளவென தீ பரவி எரிய தொடங்கி சிறிது நேரத்தில் படகு தீக்கிரையாகி சாம்பலானது.

விபத்தில் படகில் இருந்த 5 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.