சென்னை

சென்னை மெட்ரோவுக்காக நடந்த சுரங்கம் தோண்டும்ம் பணி நிறைவடைந்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

”மூன்று வழித்தடங்களுடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை நகரம் முழுவதும் 116.1 கி.மீ நீளத்திற்கு 2ம் கட்ட திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது. இதில் வழித்தடம் 3-இல், சேத்பட் முதல் ஸ்டெர்லிங் சாலை வரையிலான சுரங்கப்பாதை பணிகள் செப்டம்பர் 2023-இல் சிறுவாணி மற்றும் பாலாறு என்ற இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மூலம் தொடங்கப்பட்டன.

இந்த சுரங்கப்பாதை ஒவ்வொன்றும் 708 மீட்டர் நீளம் ஆகும். ஆகஸ்ட் 2024-இல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் சிறுவாணி ஸ்டெர்லிங் சாலையை வெற்றிகரமாக வந்தடைந்தது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் பாலாறு 2024 ஜனவரியில் சேத்பட் நிலையத்திலிருந்து சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு நேற்று ஸ்டெர்லிங் சாலையை வந்தடைந்தது.

இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் பாலாறு பூமிக்கு அடியில் களிமண், மணல் மற்றும் பாறை பிரிவுகளையும், மேலும், சேத்பட் மாநகராட்சி பள்ளி, சேத்பட் தோபி காட், கருகாத்தம்மன் கோவில் மற்றும் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள பல்வேறு கடைகள் ஆகிய இடங்களையும் கடந்து வந்துள்ளது.

பல குடியிருப்பாளர்கள் தங்கள் கட்டமைப்புகளின் கீழ் நடைபெறும் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் செயல்பாடுகளை அறியாமலே இருந்தனது வேலையின் துல்லியத்தை எடுத்துக்காட்டுகிறது. சுரங்கப்பாதைக்கு மேலே 6 மீட்டர் களிமண்ணுடன் 52 மீட்டர் நீளமுள்ள கூவம் ஆற்றின் அடியில் கடந்தது சவாலாக இருந்தது.

இந்த நுட்பமான செயல்பாடு குறைபாடற்ற முறையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. இந்த சுரங்கப்பாதை பணிகளை முடிக்க 260 நாள்கள்  ஆனது, இது சென்னை மெட்ரோ ரெயிலின் கட்டம்-2 பணிகளின் தற்போதைய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது.”

என்று கூறப்பட்டுள்ளது.