குற்றாலம்

டும் வெள்ளம் காரணமாக குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

தென்காசி மாவட்டத்தின் உள்ள பிரபல சுற்றுலா தலமான் குற்றாலத்தில் பல அருவிகள் உள்ளன. சுற்றுலா பயணிகள் தமிழக்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றால அருவிகளில் குளிக்க வருகின்றனர்.  வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகை தருவதால் சீசன் காலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

வார விடுமுறை, தொடர் விடுமுறை போன்ற நாட்களில் குற்றாலத்தின் நீர்வரத்து இருக்கும் போது, பொதுமக்கள் இங்கு மகிழ்ச்சியாக குளித்து செல்வர். ஆனால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிக்கும் சமயங்களில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, குளிக்க தடை விதிக்கப்படுவதும், நீர்வரத்து சீரானதும் குளிக்க அனுமதிக்கப்படுவதும் வழக்கம்.

தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்து பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதனால் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது. தற்போது பழைய குற்றால அருவியைத் தொடர்ந்து மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், பாதுகாப்புக் கருதி அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.