திருப்பூர்

திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்தில் 9 மாத குழந்தை உள்ளிட்ட 3 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

திருப்பூரில் பெருமாநல்லூர் சாலையில் உள்ள பாண்டியன் நகர், சத்யா காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்தி க்கு அப்பகுதியில் சொந்தமான வீடு உள்ளது., கார்த்தி அங்குள்ள கோவில் விசேஷங்களுக்குப் பயன்படுத்தப்படும் பட்டாசு நாட்டு வெடிகளை தயாரித்து கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று மதியம் திடீரென அதிக சப்தத்துடன் வெடிச்சத்தமானது கேட்டுள்ளது., கார்த்தி என்பவரது வீடு முழுவதுமாக தரைமட்டமாக சேதமடைந்துள்ளது. இச்சம்பவத்தில் அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

முதலில் இந்த வெடி விபத்தில் சிக்கி ஒருவர் உடல் சிதறி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. தற்போது  மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 9 மாத குழந்தை, பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த குமார் என்பவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

இந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் கார்த்தியின் வீடு சேதம் அடைந்ததுடன், அருகில் இருந்த 10-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் சேதம் அடைந்துள்ளன. காவல்துறையினர் ஆய்வில் கார்த்திக்கு சொந்தமான வீட்டில் இருந்து ஏராளமான நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தில் மேலும் ஆய்வு நடந்து வருகிறது.