சென்னை

ன்று சாம்சங் ஊழியர்கள் போராட்டம் குறித்து அந்த நிறுவன மேலாளர்களுடன் தமிழக அமைச்சர் டி ஆர் பி ராஜா பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்

சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஒன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த 9 ஆம் தேதி முதல் ஆலைக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..   சுமார் 1500க்கும் மேற்பட்டோற் தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிக சம்பளம், பணிநேரம் குறைப்பு மற்றும் ஆலையில் சங்கத்திற்கான அங்கீகாரம் ஆகியவற்றை வலியுறுத்தியும் போராட்டம் நடந்து வரும் நிலையில் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என ஆலை நிர்வாகம் தெரிவித்தது. மேலும் அவர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்தும் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாம்சங் நிறுவன மேலாளர்களுடன் இன்று காலை 9 மணியளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் தளத்தில்,:

”முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி, இன்று காலை சாம்சங் நிறுவன மேலாளர்களுடனான சந்திப்பின் போது, நிலுவையில் உள்ள பிரச்னைகளை தீர்க்கப் பயனுள்ள உரையாடலை நடத்தினோம்.

இப்பிரச்னையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் இணைந்து, தொழிலாளர்களுக்கு நன்மையான தீர்வு கிடைப்பதற்கான முயற்சிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சாம்சங் நிர்வாகத்தினரும் அவர்களின் ஊழியர்களும் இணைந்து, எல்லா தரப்புக்கும் பயனுள்ள ஒரு நல்ல முடிவை எட்டுவார்கள் என உறுதியுடன் நம்புகிறோம்”

என்று பதிவிட்டுள்ளார்.