சென்னை

தெற்கு ரயில்வே நவராத்திரி விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

* கோவையிலிருந்து இன்று (6-ந்தேதி) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06171), மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து நாளை (7-ந்தேதி) காலை 10.30 மணிக்கு புறப்பட்டு கோவை வழியாக போடனூர் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06172), அதேநாள் மாலை 6 மணிக்கு போடனூர் சென்றடையும்.

* சென்னை சென்டிரலில் இருந்து வரும் 9-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் (06178), மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து வரும் 10-ந்தேதி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06179), மறுநாள் காலை 11.25 மணிக்கு வந்தடையும்.

* சென்னை சென்டிரலில் இருந்து வரும் 8-ந்தேதி இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி செல்லும் சிறப்பு ரெயில் (06186), மறுநாள் மதியம் 1.50 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறுமார்க்கமாக, தூத்துக்குடியில் இருந்து வரும் 9-ந்தேதி மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06187), மறுநாள் காலை 8.55 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

* திருச்சியில் இருந்து வரும் 11-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையில் (திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை தவிர்த்து) வாரத்தின் 5 நாட்கள் காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06190), அதேநாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வரும் 11-ந்தேதி முதல் 31-ந்தேி வரையில் (திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை தவிர்த்து) வாரத்தின் 5 நாட்கள் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் சிறப்பு ரெயில் (06191), அதேநாள் இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.