சென்னை: சரஸ்வதி பூஜை – நவராத்திரி  உள்பட பண்டிகை கால விடுமுறை காலத்தை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளியில் இருந்து தாம்பரம் வாரத்தில் வரும் 11ந்தேதி முதல் டிசம்பர் மாதம் வரை வாரத்தில்  5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் தற்போது நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் காலாண்டு விடுமுறை நாட்களாகும். இதனால் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால், ஏற்படும்  பாண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சி-தாம்பரம் இடையே பகல் நேர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது

இந்த நிலையில்,  வருகிற 11-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு வாரத்தில் 5 நாட்கள் (திங்கட்கிழமை, வியாழக்கிழமை தவிர்த்து) பகல் நேர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரெயில் (வண்டி எண்.06190) செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் 5 நாட்களும் திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தஞ்சைக்கு 6.24 மணிக்கும். கும்பகோணத்திற்கு 6.58 மணிக்கும், மயிலாடுதுறைக்கு 7.28 மணிக்கும், சீர்காழிக்கு 7.52 மணிக்கும், சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்க ல்பட்டு வழியாக சென்னை தாம்பரத்திற்கு மதியம் 12.30 மணிக்கு செல்லும்.

அங்கிருந்து இந்த ரெயில் மறுமார்க்கமாக (வண்டி எண். 06191) மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு சீர்காழிக்கு இரவு 7.52 மணிக்கும், மயிலாடுதுறைக்கு 8.43 மணிக்கும், கும்பகோணத்திற்கு 9.18 மணிக்கும், தஞ்சைக்கு 10.13 மணிக்கும். இரவு 11.35 மணிக்கு திருச்சிக்கு செல்லும்.

இந்த ரெயிலில் 12 இருக்கை பெட்டிகள், 6 படுக்கை பெட்டிகள் உள்பட மொத்தம் 20 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. எனவே இந்த ரெயிலை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு திருச்சி கோட்ட ரெயில்வே அறிவித்து உள்ளது.