சென்னை

மிழக அரசின் உண்மை கண்டறியும் குழு மத்திய அரசு சென்னை மெடோர் இரண்டாம் கட்டத்துக்கு ரூ. 63246 கோடி நிதி வழங்கவில்லை என அறிவித்துள்ளது.

.

சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மெட்ரோ திட்டத்திற்கு நிதி கோரியிருந்தார். மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து, சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மத்திய அரசு சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதி வழங்கியுள்ளதாக தகவல் பரவியது. சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ரூ63,246 கோடி நிதி அளித்துள்ளதாக பொய்யான தகவல் பரப்பப்படுவதாக தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு,

“சென்னை மெட்ரோ திட்டம் 2ம் கட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இது தவறான தகவல். சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளுக்காக மத்திய அரசு தரப்பில் ரூ.7425 கோடி, தமிழக அரசு தரப்பில் ரூ.22,228 கோடியும், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மூலம் மாநில அரசின் உத்திரவாதத்தில் கடனாக ரூ.33,593 கோடியும் பெறப்படும். தவறான தகவலை பரப்பாதீர்.”

என்று தெரிவித்துள்ளது.