கோவை

சிபிசிஐடி காவல்துறையினர் கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் தனியார் வங்கி அதிகாரி உள்ளிடோரிடம் விசாராஇ நடத்தி உள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு கோடநாடு பங்களாவில் புகுந்த கும்பல், ஏராளமான ஆவணங்கள் மற்றும் பொருள்களை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு  ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 19 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.  இதுவரை 500க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்..

விசாரணையின் அடிப்படையில் கோடநாடு எஸ்டேட்டில் பல ஆண்டுகளாக கோயில் பூசாரியாக இருந்து வரும் விக்னேஷ் என்ற நபருக்கு சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பிருந்தனர். மேலும் தனியார் வங்கி தரப்பு நிர்வாகிகளுக்கும் இந்த விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இன்று கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கோயில் பூசாரி விக்னேஷ் மற்றும் தனியார் வங்கி அதிகாரி நேரில் விசாரணைக்கு ஆஜராகினர். தற்போது இவர்கள் இருவரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரண நடத்தி வருகின்றனர்.