ரக்கோணம்

யில்வே தண்டவாளத்தில் விரிசல் இருப்பதைக் கண்ட ரயில்வே ஊழியர் தனது சாமர்த்தியத்தால் பெரும் விபத்தை தவிர்த்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வழியாக சென்னைக்கு, திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் புளியமங்கலம் ரயில் நிலையம் அருகே சென்றபோது, தண்டவாளத்தில் வழக்கத்திற்கு மாறாக சப்தம் கேட்டது. இதை கவனித்த ரயில்வே ஊழியர் ஒருவர் உடனடியாக ரயிலை நிறுத்துமாறு சத்தமிட்டார்.

ரயில் வேகமாக சென்றுகொண்டிருந்ததால், பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுக்குமாறு ரயில்வே ஊழியர் கூறியிருக்கிறார். பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததும் ரயில் நிறுத்தப்பட்டது. அருகே சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் விரிசல் இருப்பதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ரயில்வே ஊழியர் சாதுரியமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. உடனடியாக ரயில்வே பணியாளர்களுக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே பணியாளர்கள், சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 30 நிமிடம் தாமதமாக மீண்டும் ரயில் இயக்கப்பட்டது.