சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார்  5000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம்  5ந்தேதி அவரது வீட்டின் முன்பு ரவுடிகளைக்கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தற்போது வரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகள் 2 பேர் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், 27 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டது.

கொலைவழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட 30 பேர்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிக்கையில் A1 குற்றவாளியாக பிரபல ரவுடி நாகேந்திரன் மற்றும் A2 குற்றவாளியாக தலைமறைவாக இருக்கும் ரவுடி சம்போ செந்தில் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேடப்பட்டு வரும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன்  வெளிநாடு தப்பி சென்று விட்டார் என கூறப்படுகிறது.  இவர் செந்திலுக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படும் மொட்டை கிருஷ்ணனை பிடித்தால், ஆம்ஸ்ட்ராங் கொலை சதித்திட்டம், சம்பவம் செந்தில் இருப்பிடம் தொடர்பாக பல்வேறு பயனுள்ள தகவல்கள் கிடைக்கும் என போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடரும் கைதுகள் _ 28ஆக உயர்வு: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது