சென்னை

ரும் 7 மற்றும் 9 தேதிகளில் புதுச்சேரி – விழுப்புரம் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.

நேற்று  தெற்கு ரயில்வே வெளியிட்டுள செய்திக்குறிப்பில்,

’திருச்சி கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் மின்சார ரயிலும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வரும் மின்சார ரயிலும் வருகிற 7 மற்றும் 9  தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

அதே போல, விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலை செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் வருகிற 6-ந் தேதியும், திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் வரும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் 7-ந் தேதியும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-20606) வருகிற 6, 8, 10 ஆகிய தேதிகளில் இரவு 10.35 மணிக்கு புறப்படும். அதே போல, சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (22671) 9-ந் தேதி மட்டும் காலை 7.35 மணிக்கு புறப்படும்.

மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (22672) 9-ந் தேதி மட்டும் மாலை 4 மணிக்கு புறப்படும். நெல்லையில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (06070) 10-ந் தேதி மட்டும் இரவு 8.15 மணிக்கு புறப்படும்.”

என்று கூறப்பட்டுள்ளது.