சென்னை

டிகர் விஜய் ஆரம்பித்த த வெ க கொஇ விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட மாட்டோம் என அறிவித்துள்ளது.

பிரபல நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். கடந்த் பிப்ரவ்ரி மாதம்3 ஆம் தேதி கட்சி தொடங்கிய அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்தார். கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி விஜய் தனது கட்சியின் கொடி மற்றும் கொடிப்பாடலை அறிமுகப்படுத்தினார்.

அந்தக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம்பெற்றிருந்ததுடன் இரண்டு யானைகளும் வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகைப்பூவும் இடம்பெற்றிருந்தது. எனவே பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னத்தை தமிழக வெற்றிக் கழகம் தனது கொடியில் பயன்படுத்தி இருப்பதாக அக்கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் புகாருக்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில்

”அரசியல் கட்சிக் கொடியில் இடம்பெறும் சின்னங்களுக்கு ஆணையம் ஒப்புதலோ, அங்கீகாரமோ வழங்காது. எனவே, தமிழக வெற்றிக் கழக கொடியில் யானை இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது, தேர்தல் நேரத்தில் தமிழக வெற்றிக் கழகம் யானையை சின்னமாக பயன்படுத்த முடியாது”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.