டெல்லி

ராகுல் காந்தி தமிழக மீனவர்களின் விடுதலை குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையினர் இந்திய மீன்வர்களை கைது செய்து சிறையில் அடைப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.  அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இதைப் போல் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர்ஜெய்சங்கருக்கு மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தியும் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சுதா எழுதிய கடிதத்தின் அடிப்படையில், மத்திய அரசிடம் எதிர்க்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.