சென்னை

சென்னை மாநகராட்சி பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு அபராதத்தை உயர்த்தி உள்ளது.

சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் மற்ரும் திடக்கழிவை எரித்து சுற்றுச் சூழலை பாழ் செய்வோருக்கு சென்னை மாநகராட்சி அபரதம் விதித்து வருகிறது.

இந்நிலையில் பொது இடத்தில் திடக்கழிவை எரித்தால் விதிக்கப்படும் அபராதத்தை ரூ.1,000 லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் பொது இடத்தில் மரக்கழிவு கொட்டினால் விதிக்கப்படும் அபராதம் ரூ.200 லிருந்து ரூ.2,000 ஆகவும், வியாபாரிகள் குப்பை தொட்டி வைக்காவிட்டால் விதிக்கப்படும் அபராதம் ரூ.100 லிருந்து 1,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை மெரினா மற்றும் அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில்ல் பொது இடத்தில் நிகழ்ச்சி நடத்திவிட்டு தூய்மைப்படுத்தாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.