சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உயர்நீதிமன்ற வரவேற்பு விழாவில் தமிழில் பேசி வரவேற்பு பெற்றார்.

“தமிழ்த்தாய்க்கு முதல் வணக்கம்..” எனக் கூறி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தனது உரையை தொடங்கினார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றுக் கொண்ட நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமுக்கு, உயர்நீதிமன்றத்தில் வரவேற்பு விழா நடைபெற்றது

43 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தமிழ் பேசக்கூடியவர் தலைமை நீதிபதியாக வந்துள்ளதாக, விழாவில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் புகழாரம் சூட்டினார்.