கேரளாவின் திருச்சூரில் 3 ஏடிஎம் மையங்களில் அடையாளம் தெரியாத கும்பல் ரூ.70 லட்சத்தை கொள்ளையடித்துள்ளது.

இன்று அதிகாலை சுமார் 2 மணி முதல் 4 மணிக்குள்ளாக மாப்ராணம், திருச்சூர் கிழக்கு மற்றும் கொளழி ஆகிய இடங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் மூன்று ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்துள்ளனர்.

சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி, கேஸ் கட்டரைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

இதுகுறித்து அண்டை மாநிலமான தமிழக காவல்துறைக்கும் கேரள போலீசார் தகவல் கொடுத்தனர்.

இந்த நிலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே இந்த கொள்ளை கும்பலை சுற்றிவளைத்த போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காவல்துறையினர் சுட்டதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இந்த கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவன் உயிரிழந்தான்.