சென்னை

ரு சக்கர வாகனங்களுக்கு சென்னை விமான நிலையத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முக்கிய விமான நிலையமாக இருந்து வருகிம்.சென்னை விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளிநாடுகள் மற்றும் உள்நாடுகளுக்கு விமானம் மூலம் பயணம் செய்து வருகின்றனர்.

இன்று சென்னை விமான நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பயணிகளை வழியனுப்ப, வரவேற்க வந்தவர்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.

இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த உத்தரவும் வராத நிலையில், பார்கிங் மேலாண்மை செய்யும் நிறுவனத்தின் ஊழியர்கள் இரு சக்கர வாகனங்களை உள்ளே வரக்கூடாது என தடுப்பதாக பயணிகள் புகார் கூறினர்.

ஊழியர்கள் மெட்ரோ நிலையம் உள்ள பார்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு நடந்து வருமாறு அறிவுறுத்தினர். பொதுமக்கள், விமான பயணிகள் மத்தியில் விமான நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.