குற்றாலம்,

ராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து ஆனந்தமாக குளியலில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவுவதால் குற்றாலம் அருவிகளில் விழும் தண்ணீரில் குளித்து மகிழுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தற்போது அருவிகளில் சீராக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.என்வே தற்போது அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால், அருவிகளில் மக்கள் குவிந்துள்ளனர். மெயின் அருவியில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் குளித்து மகிழ்ந்துள்ளனர். தற்போது வரை குற்றாலத்தில் ஐந்தருவி, பழைய குற்றால அருவியிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.