திருநெல்வேலி

திருநெல்வேலியில் ஏற்பட்ட நில அதிர்வு  குறித்து மாவட்ட நிர்வாகம் விள்க்கம் அளித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மதியம் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியானது. எனவே இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் கள ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

அம்பாசமுத்திரம் பகுதியில் உணரப்பட்ட நிலஅதிர்வு குறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் மற்றும் இந்திய தேசிய கடலியல் தகவல் சேவைகளுக்கான மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என மாவட்ட நிர்வாகம்,

”அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அபாயகரமான வகையில் நிலஅதிர்வு எதுவும் பதிவாகவில்லை.

அங்கு ஏற்பட்டது ரிக்டர் அளவுகோலில் 1 முதல் 3 வரையிலான லேசான நிலஅதிர்வு தான்,,

இது போன்ற அதிர்வுகள் உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான இடங்களில் ஏற்படும் என்பதால் இது குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை

என விளக்கம் அளித்துள்ளது.