சென்னை

ன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை – கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

சென்னை நகர போக்குவரத்தில் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தினசரி ஏராளமான மக்கள் இந்த மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்வோர் என இந்த ரெயில் சேவையை நம்பியுள்ளனர்.

இன்று ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்.

”பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை அவ்வப்போது குறிப்பிட்ட வழித்தடங்களில் முழுவதுமாக அல்லது பகுதியாக ரத்து செய்யப்படும் வழக்கத்தின்படி, தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, சென்னை தாம்பரம் – கடற்கரை வரையிலான மின்சார ரயில் சேவை இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரத்து செய்யப்படுகிறத்.  மேலும், பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை – பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்”

எனத் தெரிவித்துள்ளது.