சென்னை

மலாக்கத்துறை ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீர் உள்ளிட்ட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் தி.மு.க. நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் போதை தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டு இது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்து சென்னை முதன்மை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜாபர் சாதிக் மீதான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீர் உட்பட 12 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அமலாக்கத்துறை 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

அமலாக்கத்துறை ஜாபர் சாதிக்கின் சினிமா தயாரிப்பு நிறுவனம் உட்பட 8 நிறுவனங்களும் சேர்க்கப்பட்டு வழக்கில் 12-வது நபராக சேர்க்கப்பட்டுள்ள இயக்குனர் அமீர் சட்டவிரோதமான பணத்தை கையாண்டதாக அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.