சென்னை

மிழகத்தில் பெரியாரை தாண்டி.யாராலும் அர்சியல் செய்ய முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.

நேற்று தமிழகம் எங்கும் பெரியாரின் 146-வது பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.  பெரியாரின் பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

விஜய் எளிய முறையில் மலர் மாலையை தானே எடுத்துக்கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது த.வெ.க.பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் , நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

“யாராக இருந்தாலும் தமிழகத்தில் பெரியாரை தாண்டி, பெரியாரை தொடாமல் அரசியல் செய்ய முடியாது. நண்பர் விஜய் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

எனத் தெரிவித்துள்ளார்.