சென்னை: மணலி துணைமின் நிலையத்தில் இரவில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து காரரணமாக  சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் வடசென்னை  முழுவதும் இருளில் மூழ்கியது.

இதனால், பொதுமக்கள் வீடுகளில் இருக்க முடியாமல் சாலையோரங்களில் தஞ்ச மடைந்தனர். சுமார் 4மணி நேரம் மின்சாரம் தடையான நிலையில், பெரும்பாலான மக்கள் சாலையோரங்களிலேயே தூக்கி எழுந்தனர்.

சில மணி நேரம் மின்விநோயகம் இல்லாததால்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொந்த தொகுதியான கொளத்தூரில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி மின்வாரிய அலுவலகம் முன் திரண்டு அதிகாரிகளிடம் விசாரித்தனர்.  இதனால் அங்கு சலசலப்பு எழுந்தது. இதனை தொடர்ந்து மின்வாரியம் சார்பில்  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல் துறையினர்,  பொதுமக்களை அங்கிருந்து கலைந்துபோகச் செய்தனர். மேலும்,  கூட்டம் போடினால் கைது செய்வோம்” என எச்சரிக்கை விடுத்தனர்.  இதனால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

நேற்றிரவு, மணலி 400/230kV SS இல் உள்ள இரண்டு ஃபீடர்களிலும் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சென்னைக்கான மின்சாரம் பாதிக்கப்பட்டது.#TANGEDCO உடனடியாக பதிலளித்தது, மாற்று பாதைகள் மூலம் மின்சாரத்தை மாற்றி, படிப்படியாக விநியோகத்தை மீட்டெடுத்தது.

நள்ளிரவு சுமார் 11மணி நேரம் துண்டிக்கப்பட்ட மின்சாரம் அதிகாலை 2மணிக்கு மேல் படிப்படியாக  வரத்தொடங்கியது. அதிகாலை 3மணிக்கு பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் மின்சாரம் வநதது.  இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

திடீரென இரவு நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் என்ன நடந்தது என தெரியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்த தீ விபத்தால் மத்திய சென்னை வடசென்னை மற்றும் தென்சென்னை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. முதலில் வழக்கமாக மின் விநியோகம் தடைபடுவது தானே என பொதுமக்கள் நினைத்தனர். ஆனார் அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் மின்தடை ஏற்பட்டதால் அவர்கள் சற்று குழம்பி போயினர். ஆனால் செல்போன் மூலமாக சமூக வலைதளம் பயன்படுத்துவோர் ஊடகங்களில் வெளியான செய்தியை வைத்து மணலி தீ விபத்து குறித்து அறிந்து கொண்டனர்.

பொதுவாகவே மின்தடை ஏற்படும் போது தமிழ்நாடு வாரியத்தின் சேவை மைய எண்களை பலரும் தொடர்பு கொண்டு என்ன காரணம், எப்போது மின் விநியோகம் சீராகும் என விசாரிப்பார்கள். அப்படியாக ஒரே நேரத்தில் நேற்று இரவு பலர் முயற்சி செய்ததால் சேவை மைய என்ணையும் தொடர்பு கொள்ள முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் பலர் மின்வாரிய அலுவலகம் சென்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த மின் விபத்து காரணமாக வடசென்னை முழுமையாக இருளில் மூழ்கியது. மேலும்,  சென்னையில் முக்கிய இடங்களான திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கோட்டூர்புரம், நந்தனம், அடையாறு, தேனாம்பேட்டை, மந்தவெளி, ராயபுரம், சூளைமேடு, மாதவரம், கோடம்பாக்கம், கொளத்தூர், கோயம்பேடு, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், சைதாப்பேட்டை, கிண்டி, ஆகிய பகுதிகள் இருளில் மூழ்கியது.

சாலைகளிலும் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் மிகப்பெரிய அளவில் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் மின்சார துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி, சென்னை முழுவதும் அடுத்த 15 முதல் 30 நிமிடத்தில் மின் விநியோகம் படிப்படியாக சீராகும் என சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்தார். முதற்கட்டமாக மயிலாப்பூர் , ராஜ அண்ணாமலை புரம், புளியந்தோப்பு பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படும் என்றும், மற்ற இடங்களுக்கு படிப்படியாக சீராகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அதற்கான முழு முயற்சிகளும் எடுக்கப்பட்ட நிலையில் சென்னை முழுவதும் மின் விநியோகம் படிப்படியாக சீரடைந்தது.