மேஷம்

உடல் நிலையில் உற்சாகம் தோன்றும். தொழிலில் ஏற்பட்டுக்கிட்டிருந்த தடை விலகும். வியாபாரம் விருத்தியாகும்.  உங்களிடமிருந்து போட்டியாளர் விலகுவார். இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். நீண்ட கால வழக்கு சாதகமாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். நீங்கள் யார் என்பதை நிரூபிப்பீங்க. வருமானம் பல வழியில் வரும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர் விருப்பம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் செல்வாக்கு உயரும். வேலை வாய்ப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். ஒங்களோட விருப்பம் நிறைவேறும். ஒரு நண்பர் ஒங்களோட வாழ்க்கையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த முயற்சி இப்போது நடந்தேறும். வரவேண்டிய பணம் உங்களைத் தேடிவரும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிறிய முதலீட்டிலும் பெரிய லாபம் கிடைக்கும்.

ரிஷபம்

செய்துவரும் தொழிலில் நேரிடையாய்க் கவனம் செலுத்துவீங்க. பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.  சம்பாதிக்கும் சான்ஸ் கள் குவியும். புதிய வாகனம் வாங்குவீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வேலைக்காக எதிர்பார்த்தவருக்கு நல்ல தகவல் வரும். கலைஞர்களுக்குப் புதிய அக்ரீமென்ட் கையெழுத்தாகும். பெண்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். உடல்நிலை சீராகும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இருக்கும். விவசாயிகள் பணியில் கவனம் தேவை. பின்னர் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரிகள் விற்பனையில் கூடுதல் முயற்சி எடுத்து லாபம் நிலைக்கு உயருவாங்க. பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். ஒங்களோட எதிர்பார்ப்பு நிறைவேறும். ஒரு சிலருக்கு புதிய இடம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஒங்களோட வாழ்க்கையில் இருந்த சங்கடம் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். சமூகத்தில் அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். திருமண வயதினருக்கு வரன் வரும்.

மிதுனம்

உடல்நிலைல இருந்துக்கிட்டிருந்த பாதிப்பு நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும். செல்வாக்கு உயரும். வழக்கு சாதகமாகும். முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். திங்கள், செவ்வாயில் செயல்களில் நிதானம் தேவை. எண்ணத்தில் துணிவும், செயலில் தெளிவும் இன்கிரீஸ் ஆகும்.பண வரவு அதிகரிக்கும். தடைப்பட்ட வேலை நடக்கும். நீங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். கோயில்களுக்குச் செல்லும் பழக்கத்தால் உங்களுக்கு யோகத்தை உண்டாக்கும். செயல்களை ஆதாயமாகும்.செல்வாக்கு உயரும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் அக்கறை அதிகரிக்கும். சம்பாத்தியத்தில் கவனம் செல்லும். தொழிலில் இருந்த தடை விலகும். பணிபுரியும் இடத்தில் திறமைக்கு மதிப்புண்டாகும். முயற்சி வெற்றியாகும். நீங்கள் மேற்கொண்ட வேலை நடக்கும். பிறரால் செய்ய முடியாததை செய்து முடிப்பீங்க.

 சந்திராஷ்டமம் : செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 16 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்

உடல்நிலையில் கவனம் தேவை. ஒங்களோட வேலையில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். விருப்பம் நிறைவேறும். செவ்வாய், புதனில் பொறுமை அவசியம். ஒங்களோட முயற்சிகள் ஒங்களோட நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தடைபட்ட வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் நிச்சயமா உண்டுங்க. ஹெல்த்தைக் கெடுக்கும் எந்த விஷயத்துலயும் ஈடுபடாம இருந்தால் உங்க ஹெல்த் சூப்பரா இருக்குங்க. குழந்தைகள் குறித்த கவலை நீங்கும். ஒரு சிலருக்கு குழந்தை பேறு உண்டாகும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். கூட்டுத்தொழிலில் ஆதாயம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இழுபறியாக இருந்த பூர்வீக சொத்து ஒங்களோட கைக்கு வரும். தீராமல் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 18 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்

வேலையாட்களின் ஒத்துழைப்பு ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். பெண்களின் நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். உடல்நிலை சீராகும். கணவருடன் இணக்கமான நிலை ஏற்படும். வேலையில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் செல்வாக்கு உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பும் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். போட்டி, பிரச்னை என்ற நிலை மாறி இழுபறியான வெற்றி ஏற்படும். பணவரவில் இருந்த தடை நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் குறையும். ஒரு சிலர் குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றி வருவீங்க. வாழ்வில் புதிய நம்பிக்கை உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 20 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி

எந்த இடத்திலும் முதன்மையாக நின்று, செய்ய நினைக்கும் வேலைகளை துணிச்சலுடன் செய்யும் குலதெய்வ அருள் பரிபூரணமாக கிடைக்கும். பூர்வீக சொத்து விவகாரத்தில் ஒங்களோட எதிர்பார்ப்பு நிறைவேறும். தைரியமும் துணிச்சலும் உண்டாகும். முயற்சியில் லாபம் தோன்றும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். சட்ட சிக்கல்களில் இருந்து வெளி வருவீங்க. அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும் செல்வாக்கு வெளிப்படும். ஒங்களோட ராசிநாதன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய சொத்து சேரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். அதிர்ஷ்டக் காரகனின் சஞ்சார நிலைகளும் சாதகமாக இருப்பதால் தேவைக்கேற்ற பணம் வரும். பொன், பொருள் சேரும். பொருளாதார நிலை உயரும். மனசுல அமைதி மீளும்.

துலாம்

முற்பகுதியில் பொன் பொருள் சேரும். எதிர்ப்பு இல்லாமல் போகும். நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர். பணிபுரியும் இடத்தில் இருந்த நெருக்கடி விலகும். அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துச்செல்வீங்க. ஆரோக்கியம் சீராகும் வழக்கத்தைவிட துணிச்சலாக, தைரியமாக செயல்படுவீர். தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும். வேலைக்காக முயற்சித்தோரின் கனவு நனவாகும். எதிர்பார்த்த தகவல் வீடு தேடிவரும். பெண்களுக்குக் குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தோரின் விருப்பம் நிறைவேறும். விவசாயத்தில் அக்கறை அதிகரிக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நல்லது. வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி நிறைவேறும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

பொறுப்பு கூடும். வேலை பளு அதிகரிக்கும். பணிபுரிபவர்களுடன் ஒரு இடைவெளி ஏற்படும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு நன்மை அதிகரிக்கும். பணவரவு திருப்திதரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் இருந்த நெருக்கடி விலகும். முயற்சியில் வெற்றி உண்டாகும். பொருளாதார நிலை உயரும். வரவேண்டிய பணம் வீடு தேடிவரும். பணியாளர்களால் லாபம் அதிகரிக்கும். பிற மொழியினர், இனத்தினர் ஒங்களோட முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர். முடங்கிக் கிடந்த தொழில் முன்னேற்றமடையும். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன்வரும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பெண்களுக்கு கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு விலகும்.

தனுசு

நினைத்த வேலைகளை நினைத்தபடி செய்து முடிப்பீர். சமூகத்தில் அந்தஸ்தும் உயரும். ஒரு சிலருக்கு பொறுப்பும் பதவியும் கிடைக்கும். பணியிடத்தில் இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வெளியூர் வாசம் சிலருக்கு ஏற்படும். இதுவரை சந்தித்த பிரச்னை, சோதனை எல்லாம் விலகும். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். லாபம் அதிகரிக்கும். ஒங்களோட நிலை உயரும். திருமணம், குழந்தை பாக்கியம், சொத்து என்ற எதிர்பார்ப்பு நிறைவேறும். பெண்களுக்கு குடும்பம், வேலையில் இருந்த நெருக்கடி தீரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உண்டாகும். பொன் பொருள் சேரும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். பல வழியிலும் வருவாய் வரும். ஒங்களோட மனதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படும் புதிய நட்பு அமையும். கலைஞர்கள் கனவு நனவாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும்.

மகரம்

விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறும். உயர்க்கல்வி பயிலும் மாணவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பயணத்தின்போது உங்க ஆரோக்கியம் உள்பட எல்லாம் சரியா இருக்கான்னு ஒரு வாட்டி செக் செய்துக்குங்க. தெய்வ அருள் உண்டாக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னை சுமுகமாக முடியும். நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் வருந்தி வந்தவர்களின் நிலையை மாற்றும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் வரும். நண்பர்களால் ஆதாயம் தோன்றும். இழுபறியாக இருந்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். செய்துவரும் தொழிலில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.

கும்பம்

குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். தம்பதியர்களுக்குள் அன்னியோன்யம் உண்டாகும். அரசியல்வாதிகள் நிலை உயரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு போட்டித் தேர்வுகள் வெற்றியை உண்டாக்கும். குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வருவீங்க. எதிர்பார்ப்பு நூறு சதவிகிதம் நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட தடை அகலும், லாபம் அதிகரிக்கும். வேலையாட்களுடன் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். ஒங்களோட தைரியம் மேலோங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்கள் கவலை நீங்கும். திருமண  வயதினருக்கு தகுந்த வரன் வரும். உத்தியோகத்தில்  இருந்த நெருக்கடி நீங்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு, இடமாற்றம் போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு உண்டாகும்.

மீனம்

அடைபடாமல் இருந்த கடன்கள் அடையும். வீண்  செலவுகளில் கவனம் தேவை. பெண்களுக்கு குடும்பத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். உடல்நலனில் ஏற்பட்ட சங்கடம் விலகும். சகோதரர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகள் மீது கவனம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். விவசாயிகள் நிலையில் முன்னேற்றம் தோன்றும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். முயற்சிகளில் வெற்றியடைவது மட்டுமே லட்சியமாக கொண்ட உங்களுக்குத் திருப்பு முனையான வாரம். ஒங்களோட சுய திறன் வெளிப்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சமூகம் உங்களை உணரும். இதுவரை இருந்த நெருக்கடி இல்லாமல் போகும். தொழில், உத்தியோகம் போன்றவற்றில் இருந்த தடை விலகி லாபம் உண்டாகும். குலதெய்வ அருளால் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.