சாக்கன்

காராஷ்டிர அரசு ரூ. 15000 கோடி முதலீட்டில் கார் தொழிற்சாலை அமைக்க அனுமதி அளித்துள்ளது.

மகாராஷ்டிராவில் சாக்கனில் ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வேகன் நிறுவனங்கள் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதற்கு அந்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட ரூ.120,000 கோடி முதலீட்டின் இது ஒரு பகுதியாகும். ஏற்கனவே டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் ஆலைக்கும் அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த ஸ்கோடா, ஆட்டோ வோக்ஸ்வாகன் நிறுவனங்களின் புதிய முதலீட்டைப் பயன்படுத்தி மின்சார வாகனங்கள் உள்ளிட்ட புதிய தயாரிப்புகளை உருவாக்கவும், அதன் உற்பத்தி வசதியை மேம்படுத்தவும், மாநிலத்தில் கூடுதலாக 1,000 வேலைகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சக்கனில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இவி மற்றும் ஹைபிரிட் கார் ஆலையை திறக்க திட்டமிடுவதாக அறிவித்தார்.

ஸ்கோடா, ஆட்டோ வோக்ஸ்வேகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ரூ.15,000 கோடி வரையிலான புதிய முதலீட்டுக்கு மகாராஷ்டிர அரசு ஒப்புதல் அளித்துள்ளதை வரவேற்கிறோம். இந்திய வாடிக்கையாளர்களின் சிறந்த நலன்களுக்காக குழுமத்தின் தயாரிப்புகளை மேலும் மேம்படுத்துவதை இந்த முதலீட்டு நோக்கமாகக் கொண்டுள்ளது. உற்பத்தி வசதிகளை மேம்படுத்துதல், கூடுதல் வேலைகளை உருவாக்குதல் வளர்ப்பது ஆகியவை இதில் அடங்கும். ஒப்பந்தம் குறித்த கூடுதல் விவரங்களைப் பிற்காலத்தில் வழங்குவோம்.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.