சென்னை: வங்கக் கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாவு மண்டலம் வரும் 9ந்தேதி வலுப்பெறம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில்  கடந்த 5ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 9-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திரம் மற்றும் ஒடிஸாவுக்கு இடைப்பட வங்கக் கடலில் வியாழக்கிழமை உருவான காற்றழுத்ததாழ்வு பகுதி (புயல் சின்னம்) வெள்ளிக்கிழமை மத்திய மற்றும் அதையொட்டியுள்ள வடக்கு வங்கக் கடலில் நிலவுகிறது.  இது வடக்கு திசையில் நகா்ந்து, செப்.9-ஆம் தேதி, வடமேற்கு வங்கக் கடல் அதையொட்டிய பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். தொடா்ந்து இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செப்.10 முதல் செப்.13 தேதி வரை மேற்கு – வடமேற்கு திசையில் நகா்ந்து, மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிஸாவுக்கு இடைப்பட்ட வங்கக் கடலில் நிலவக்கூடும்.  இதனால் ஆந்திரம், ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

செப். 6-ம் தேதியுடன் (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை சோழிங்கநல்லூரில் 8 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர், செங்கல்பட்டு மாவட்டம் சத்யபாமா பல்கலைக்கழகம், புதுச்சேரி ஆகிய இடங்களில் 5 செ.மீ., புதுச்சேரி பத்துகண்ணு, விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம், வானூர், கெடார் ஆகிய இடங்களில் 4 செ.மீ., செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், விழுப்புரம் மாவட்டம் சூரப்பட்டு, வளவனூர், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், நீலகிரி மாவட்டம் தேவாலா, புதுச்சேரி பாகூர் ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மத்திய மற்றும் அதையொட்டியுள்ள வடக்கு வங்கக் கடலில் நிலவும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு திசையில் நகர்ந்து வரும் 9-ம் தேதி வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதற்கடுத்த 3, 4 நாட்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம்-வடக்கு ஒடிசா பகுதிகளில் நிலவக்கூடும். தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 12-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 9-ம் தேதி வரை அதிகபட்சமாக மணிக்கு 65 கி.மீ.வேகத்திலும், வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனஅறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வானிலை நிலவரம்:

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (செப்.7) முதல் செப்.12-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்.7, 8 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.