சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் கொழும்பிலிருந்து விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டனர். பின்னர் அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், பின்னர் முதல்வர் கடிதம் எழதுவதும், அதைத்தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை இலங்கையிடம் பேசுவதும் வாடியைகாக நடைபெற்று வருகிறது. இதில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், தமிழக மீனவர்களின் பல கோடி மதிப்பிலான படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்து வருகிறது. இதை மீட்க வேண்டும் என பல ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இதுவரை அதற்கான தீர்வுகள் எட்டப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 23-ஆம்  ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது , எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்ததோடு படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் இலங்கை அதிகாரிகளால்,  இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்திய தூதரக அதிகாரிகள், தமிழக மீனவர்களை தங்கள் பராமரிப்பில் வைத்துக் கொண்டு, அவர்களை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு,  விமானம் மூலம் அவர்களை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அதன்படி,  செய்தனர். கொழும்பிலிருந்து சென்னை வந்த 7 மீனவர்களையும்,  சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள்,   வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.