சென்னை:  பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் இரவு நேர மின்சார ரயில்கள் 3 நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட உள்ளது.

அதன்படி, இன்று இரவு (செப்டம்பர் 3ந்தேதி, வரும் 5ந்தேதி மற்றும் 7ந்தேதி ஆகிய 3 நாட்கள் சென்னையில் இரவில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் , சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரத்திற்கு இரவு 9.10, 9.30 மணிக்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில்கள் செப். 3, 5, 7 ஆகிய 3 நாள்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரத்திற்கு அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில் செப். 4, 6, 8 ஆகிய 3 நாள்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கத்தில், தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு இரவு 10.40, 11.20, 11.40 மணிக்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில்கள் செப். 3, 5, 7 ஆகிய 3 நாள்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.