டெல்லி

தேர்தல் ஆணையம் அரியானா சட்டசபை தேர்தல் தேதியை மாற்றி உள்ளது

அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 1ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று அரியானா சட்டசபை தேர்தல் தேதி மாற்றப்படுவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  அதாவது அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் நடைபெறவிருந்த நாளான்று அரியானாவில் பிஜோனி என்ற சமுதாய மக்களின் முக்கிய பண்டிகை வருவதால் அக்டோபர் 1ம் தேதிக்கு பதில் அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.