சென்னை

தெற்கு ரயில்வே தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணி மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து 28-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”தாம்பரத்தில் இருந்து 28-ம் தேதி இரவு 7.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 3.35 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து 31-ம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் காலை 8.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா், கடலூா் துறைமுகம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீா்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, பேரளம், திருவாரூா், நாகை வழியாக இயக்கப்படும். .

திருச்சியில் இருந்து 28-ம் தேதி பகல் 12 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மாலை 4.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து 30-ம் தேதி காலை 10.45 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு மாலை 4.10 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும்.”

என அறிவிக்கப்பட்டுள்ளது.