சென்னை:  சென்னையில் செயல்பட்டு வரும் அரசுஇருபாலார் மேல்நிலைப்  பள்ளியில் படித்த 12ம் வகுப்பு மாணவி கர்ப்பம்  அடைந்துள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாணவியை கர்ப்பமாக்கிய  சக மாணவன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அரங்கேறி உள்ளது.

சென்னை கோபாலபுரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அந்த பகுதி சுற்றுவட்டார மாணவ மாணவிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர்  படித்து வருகின்றனர். இந்த பள்ளி்யில்   கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் மேல்நிலை வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள   மேல்நிலை வகுப்புகளில் மாணவிகளும் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இந்த பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர்  திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர் அதிர்ச்சி அடைந்தார்.  மாணவி 6 வாரம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து மருத்துவத்துறை உயரதிகாரிகளின் ஆலோசனைப்படி சிறுமியின் கர்ப்பம் கலைக்கப்பட்டது. அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக காவல்துறையினர், பள்ளி மாணவியிடம் விசாரணை நடத்திய போது தன்னுடன் படிக்கும் மாணவன் தான் இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார். தன்னை காதலிப்பதாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐஸ்அவுஸ் கஜபதி தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு அடிக்கடி அழைத்துச் சென்று தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார்.

இதையடுத்து அந்த மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் ஐஸ்ஹவுஸ் போலீசார் கைது செய்து, சென்னை கீழ்ப்பாக்கம் கெல்ஸ் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.