திருச்சி: திருச்சி அருகே  மன்னார்புரம் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த  தனியார் சொகுசு பேருந்தில்  இன்று அதிகலாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில் இருந்த பயணிகள்  அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடியதால், உயிரிழப்பு  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நேற்று இரவு திருச்சியில் இருந்து சென்னை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 27 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பேருந்து திருச்சி மன்னார்புரம் மேம்பாலத்தைக் கடந்தபோது பேருந்தின் டயர் வெடித்து திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள், உடனடியாக பேருந்தில் இருந்து கீழே இறங்கினர். இதனால் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த 27 பேரும் உயிர் தப்பினர்.

சிறிது நேரத்தில் பேருந்து முழுவதுமாக எரிந்து சேதமானது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்ன்ர  சில மணி நேரம் கழித்து பயணிகள் மாற்று பேருந்தில் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் இயக்கக்கூடிய பேருந்துகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் இனிவரும் காலங்களில் இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்களும், அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள்  தெரிவித்துள்ளனர்.