சென்னை

சென்னை நுங்கம்பாக்கம் ‘பப்’பில் ஆடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார்.\

சென்னையில் உள்ள கல்லூரியில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த முகமது சுகைல் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் ராமாபுரத்தில் உள்ள பி.ஜி ஹாஸ்டலில் தங்கி இருந்தார். முகமது சுகைல் நேற்று இரவு பெண் தோழிகளுடன் சேர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள ‘பப்’புக்கு வந்துள்ளார்.

அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அங்கு உற்சாகமாக நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது திடீரென மயக்கமடைந்தார். முகமது சுகைல் சுயநினைவின்றி இருந்த நிலையில் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரைபரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த இளைஞரின் உடல் கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.