சென்னை: எழும்பூர் – கடற்கரை இடையே இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கடற்கரை-விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை கடற்கரை-விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

தாம்பரத்தில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.55, 10.10, 10.40, 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில், சென்னை எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

அதே போல, சென்னை கடற்கரையில் இருந்து நாளை இரவு 10.30, 11, 11,20, 11.40, 11.59, மற்றும் 19-ம் தேதி அதிகாலை 3.55 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டில் இருந்து நாளை இரவு 10.10, 11 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில், எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து நாளை இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

திருமால்பூரில் இருந்து நாளை இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில், எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.