சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நடத்திய  குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பப்படும்  90 காலிப் பணியிடங்களுக்கு,  சமூக வாரியான பணியிடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன.

உதவி ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு உயரிய பதவிகளுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, சமீபத்தில், குரூப் 1 தேர்வு   நடைபெற்று முடிந்த நிலையில், 90 காலிப் பணியிடங்களுக்கான சமூக வாரியான ஒதுக்கீட்டு விவரங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

காலி பணியிடங்கள், முதல்நிலை, முதன்மைத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், நேர் காணலில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட உள்ளது.

இந்த நிலையில்,  90 காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வுக்கு 2.38 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், இவர்களுக்கு 38 மாவட்டங்களிலும் 797 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னையில் 124 மையங்களில் 38,891 பேர் குரூப் 1 தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில், தமிழ்நாடு முழுவதும் 1.60 லட்சம் பேர் தேர்வை எழுதி இருந்தனர். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வை எழுதத் தகுதியானவர்கள் ஆவர். இந்தத் தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையில், 90 இடங்களுக்கான காலி பணியிடங்கள் விவரம் சமூக வாரியான  அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,

1  துணை ஆட்சியர் 16
2 துணை காவல் கண்காணிப்பாளர் 23
3 உதவி ஆணையர் (வணிக வரித்துறை) 14

4 துணைப் பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள்  21

5 ஊரக மேம்பாட்டு உதவி இயக்குநர்  14

6 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 1

7  தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை மாவட்ட அலுவலர் 1

மொத்தம் = 90

இதன் முழு விவரத்தை , https://tnpsc.gov.in/Document/English/ADDENDUM_4A.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/