சென்னை
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வரின் சிறப்ப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
தமிழக அரசு இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் 10 காவல் துறை அதிகாரிகள் 2024-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
- கி.புனிதா, காவல் ஆய்வாளர் – சைபர் கிரைம் காவல் நிலையம், வேலூர் மாவட்டம்
- து. வினோத்குமார், காவல் ஆய்வாளர் – சைபர் கிரைம் பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, சென்னை.
- ச.சௌமியா, காவல் துணை கண்காணிப்பாளர் – மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, கடலூர் மாவட்டம்.
- ஐ.சொர்ணவள்ளி, காவல்ஆய்வாளர் – சைபர் கிரைம் காவல் நிலையம், திருப்பூர்
- நா. பார்வதி, காவல் ஆய்வாளர் – குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்.
- பெ.ராதா. காவல் ஆய்வாளர் – குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, திருப்பூர்.
- செ.புகழேந்தி கணேஷ், காவல் துணை கண்காணிப்பாளர் – செங்கல்பட்டு உட்கோட்டம், செங்கல்பட்டு மாவட்டம்.
- இரா.தெய்வராணி, காவல் ஆய்வாளர் – பெருந்துறை காவல் வட்டம், ஈரோடு மாவட்டம்.
- ஆ. அன்பரசி, காவல் ஆய்வாளர் – பொன்னை காவல் நிலையம், வேலூர் மாவட்டம்.
- நா.சுரேஷ், துணை காவல் கண்காணிப்பாளர் – ஊரக உட்கோட்டம், தூத்துக்குடி.
இதே போன்று பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2024- ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்படும்.
- தா.ச. அன்பு. இ.கா.ப., காவல் துறை தலைவர் – குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுதுறை, சென்னை.
- இ.கார்த்திக், இ.க.பா., காவல் கண்காணிப்பாளர்-I – தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, சென்னை.
- சி.ர.பூபதிராஜன், துணைக் காவல் கண்காணிப்பாளர் – தனிப்பிரிவு குற்றப்பபுலனாய்வுத் துறை, சேலம் சரகம்.
- க.சீனிவாசன், காவல் ஆய்வாளர் (தொ.நு.) – காவல் தொலைத்தொடர்பு பிரிவு, சென்னை.
- பு.வ. முபைதுல்லாஹ், காவல் உதவி ஆய்வாளர் – உள்வட்ட பாதுகாப்பு பிரிவு, அயல்பணி திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு, தலைமையகம், சென்னை.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.