டெல்லி: அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள இளநிலை மருத்துவ படிப்புகளான  எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து ஆகஸ்டு 21ந்தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கான  கலந்தாய்வு தொடங்குகிறது.

தமிழ்நாட்டடில்,  எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5050  இடங்கள்,ஒரு இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 150 இடங்கள், 21 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3400 இடங்கள்,மூன்று மாநில தனியார் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் 450 இடங்கள் என மொத்தம் தமிழ்நாட்டின் 9050 மருத்துவ இடங்கள் உள்ளன. அதேபோல்  பிடிஎஸ் பல் மருத்துவப் படிப்பில் மூன்று அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும் 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 1950 இடங்களும் ஆக மொத்தம் 2200 இடங்கள் உள்ளன இவற்றுள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு எம்பிபிஎஸ்படிப்பில் 851 இடங்களும் பிடிஎஸ் படிப்பில் 38 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நீட் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் மற்றும் பல்வேறு சர்ச்சைகள் முடிவடைந்த நிலையில், நீட்  கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி,  இன்று (ஆகஸ்டு 14ந்தேதி) அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு  தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு  இன்று முதல் ஆக.23-ம் தேதி வரை முதல் சுற்று கலந்தாய்வு நடைபெற உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு 2-வது சுற்று கலந்தாய்வு செப்.5 முதல் 13-ம் தேதி வரை நடக்கிறது. செப்.26 முதல் அக்.5 வரை அகில இந்திய இடங்களுக்கான 3-வது சுற்று கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதைத்தொடரந்து, எஆகஸ்ட் 21ஆம் தேதி முதல்  தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூமாகளுக்கான மாநிலக் கலந்தாய்வு  நடைபெற உள்ளது.  அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 சதவீத இடங்கள் நிரப்பப்பட்ட பிறகு, மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு மாநில அளவிலான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. எனினும் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவகள் முதலில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். இந்த விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 8ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. அதனப்டி விண்ணப்ப பதிவு முடிவடைந்தது.

இந்த கலந்தாய்வில், சிறப்பு இட ஒதுக்கீடு, 7.5% இட ஒதுக்கீடு தொடர்பான விவரம் அரசுப் பள்ளி மாணவர்கள், விளையாட்டு மாணவர்கள். மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவத்திற்கான ஒதுக்கீடு, ஆக.22 மற்றும் 23ஆம் தேதி நடைபெறும்

இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய இடங்கள் சேர்க்கை எதுவும் இல்லை. 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன. அக். 1 முதல் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது