சென்னை: பிரபல யுடியூபர் சவுக்கு சங்கர் மீதான வழக்குகளில் ஜாமின் கிடைத்துள்ள நிலையில், அவர்மீது மீண்டும் குண்டர் சட்டத்தை பாய்ச்சி காவல்துறை செய்துள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் போடப்பட்டு உள்ளதை  ஏற்கவே முடியாது. இது அப்பட்டமான விதிமீறல் என்று சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பியான கார்த்தி சிதம்பரம் திமுக அரசின் நடவடி்கைக்ககு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சவுக்கு சங்கர் மீது பெண் காவலர்களை அவதூறாக பேசுதல் மற்றும் அரசுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக தமிழகம் முழுவதும் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்மீதான பெரும்பாலான வழக்குகறில் ஜாமின் கிடைத்துள்ள நிலையில், குண்டர் சட்டமும் கைது செய்யப்பட்டது. இதுதொடர்பான வழ்கைக விசாிரத்த  சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள்  எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வு , சவுக்கு சங்கர் தரப்பில், அவசர கதியில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. ஒரே பேட்டியை மையமாக வைத்து குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது என கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். மேலும்,  யூடியூப்களில் கருத்து தெரிவிக்கும் அனைவரும் கைது செய்யப்படுகிறார்களா? இதுவரை எத்தனை பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடியோ வெளியிட்டதால், மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என எந்த அடிப்படையில் அரசு முடிவுக்கு வந்தது.

யூடியூப்களில் வெளியிடப்படும் கருத்துக்களை நம்புவது மக்களின் தனிப்பட்ட விருப்பம். அது சரியாக இருந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். நல்ல எண்ணம் கொண்டவர்கள் நல்ல வீடியோக்களை பார்ப்பார்கள், தவறான எண்ணம் கொண்டவர்கள் தவறான வீடியோக்களை பார்ப்பார்கள். அதனால், எந்த வீடியோவை பார்க்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் செய்திகள் அனைத்தும் உண்மையா? தொலைக்காட்சி சார்ந்த கட்சிகளுக்கு தானே சாதகமாக நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படு கின்றன. அதை ஏன் கேட்க முடிவதில்லை? திரைப்படங்களில் ஏன் அரிவாள் கத்திகளுடன் காட்சிகள் வெளியிடுகின்றன.  சமுதாயத்திற்கு தேவையான தத்துவத்தையா? காட்சிப்படுத்துகின்றன என கேள்வி எழுப்பியதுடன், 

ரவுடிகளின் மொழியில் பாடம் கற்பிக்கப்படுவார்கள் என சென்னை காவல்துறை ஆணையர் கருத்து தெரிவித்ததை தவறாகவும் எடுத்துக் கொள்ளலாம் என கூறியதுடன்,  அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளை போற்றுவதும், எதிராக தீர்ப்பு வழங்கும் நீதிபதியை தூற்றுவதும் வாடிக்கையானது. அதற்காக நடவடிக்கை எடுக்க முடியாது.

அனைவருமே சமூக வலைதளங்களில் தவறாக பேசக்கூடாது என அறிவுறுத்த மட்டுமே முடியும்.  யாருடைய பேச்சு சுதந்திரத்திலும் தலையிட முடியாது.  அரசுக்கு எதிரான சவுக்கு சங்கர் வெளியிடும்  வீடியோக்களை மக்கள் பார்க்கிறார்கள் என்றால், ஊழல் அதிகரித்துள்ளது என்பதே அர்த்தம்.

அரசு அலுவலகங்களில் ஊழல் என்பது இல்லையா? உச்சநீதிமன்ற நீதிபதிகளே நீதிமன்றங்களில் ஊழல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதை மறுக்க முடியுமா?

சவுக்கு சங்கருக்கு தகவல்கள் கொடுப்பது யார்? அதை ஏன் விசாரணை செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்   இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள், போதிய காரணங்கள் இல்லாமல் அவசரகதியில் சவுக்கு சங்கருக்கு மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

இந்த உத்தரவு வெளியாகி இரு நாட்களே ஆன நிலையில் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட எஸ் பி பரிந்துரையின்படி சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

புழலில் இருந்து, சவுக்கு சங்கர் மதுரை சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் ஆட்சியரின் உத்தரவு சிறை நிர்வாகத்திடம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ்வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  சவுக்கு சங்கரின் பேச்சு அநாகரீகமானது. அவர் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசுகிறார். எனினும் அவர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்திருப்பது அப்பட்டமான விதிமீறல். ஏற்றுக்கொள்ள முடியாதது. திமுக அரசின் முடிவை நீதிமன்றம் ரத்து செய்வது இன்னொரு முறை நடக்கும் என கடந்த வெள்ளிக்கிழமை சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டதை கார்த்தி சிதம்பரம் சுட்டிக் காட்டி தெரிவித்துள்ளார்.