டெல்லி: இந்தியாவில் உள்ள 100 தலைசிறந்த கலைக் கல்லூரிகளின் பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து 37 கல்லூரிகள் இடம்பிடித்து உள்ளன.  இது தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாடு அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளது.  இது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை ஆட்சிக்கு மகுடம் சூட்டுவதாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி மாநில அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து,  தமிழ்நாடு முழு கல்வி அறிவு பெற்ற மாநிலமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தற்போது ஆட்சியில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவி ஏற்றதும் தமிழக மாணவர்கள் கல்வியில் மென்மேலும் சிறப்படைய பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

நான் முதல்வன் திட்டம், தமிழ்ப்புதல்வன், புதுப்மைபெண், எண்ணும் எழுத்தும், உயர்கல்வி மாணவர்களுக்கான மாதம் ரூ.1000  உதவி தொகை என ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.  மேலும், தமிழக மாணவர்கள் அனைத்து வகையான தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும், தொழிற்கல்வி பெறும் வகையில் பல்வேறு பயிற்சிகளை இலவசமாக கொடுத்து வருகிறது. இதுமட்டுமின்றி, தமிழக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் பயனாக இன்று தமிழ்நாடு கல்வியறிவிலும், பயிற்றுவித்தலிலும் இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ்கிறது. ஏற்கனவே ஐஐடி உள்பட பல கல்வி நிறுவனங்கள் இந்தியாவின் முன்னோடி கல்வி நிறுவனங்களாக இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டு அதிகபட்சமாக முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் தேர்வாகி உள்ளன. இது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. மேலும் திமுக தலைவர், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைக்கு மேலும் மகுடத்தை சூட்டி உள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் 2024ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவனத்தின் தரவரிசை கட்டமைப்பின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.

தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் நாட்டிலேயே சிறந்த பல்கலைக்கழகமாக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (பெங்களூரு) தேர்வு செய்யப்பட்டு தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 2 ஆம் இடமும், டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் 3வது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்தியாவிலுள்ள மாநில அரசு பல்கலைக்கழகங்களில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. அதே போன்று கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் 8வது இடத்தைப் பிடித்துள்ளது. வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் 10வது இடத்தைப் பிடித்துள்ளது.

சிறந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியலில் டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரி நாட்டிலேயே சிறந்த கல்லூரியாகத் தேர்வு செய்யப்பட்டு முதல் தரவரிசைப் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து டெல்லி மிராண்டா ஹவுஸ் கல்லூரி 2ஆம் இடமும், டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரி 3ஆம் இடமும் பெற்றுள்ளன. அந்த வகையில் கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி 7வது இடத்தைப் பிடித்துள்ளது. இதே பிரிவில் சென்னை லயோலா கல்லூரி 8வது இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி 3வது இடத்தை பிடித்துள்ளது. அதோடு சிறந்த பல் மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் சென்னை சவிதா மருத்துவக் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது.

அதுபோல இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்லூரகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 கல்லூரிகள் இடம்பிடித்து தமிழ்நாட்டுக்கு பெருமையை சேர்த்துள்ளன.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகப்படுத்திய தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் கீழ், சிறந்த 100 இந்திய கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 கல்லூரிகள், மாநிலத்துக்குப் பெருமை சேர்த்துள்ளன.
சென்னை லயோலா கல்லூரி 2வது இடத்தில் உள்ளது. முதல் 20 இடங்களில் பெண்களுக்கான எத்திராஜ் கல்லூரி, மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரி மற்றும் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி ஆகியவை அடங்கும். ஆராய்ச்சி மற்றும் நிபுணத்துவ நடைமுறையின் அடிப்படையில், லயோலா கல்லூரி 100க்கு 100 பெற்றது. இது தரவரிசையை தீர்மானிக்கும் அளவுருக்களில் ஒன்றாகும்.