தேனி

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் உயர் காவல்துறை அதிகாரிகள்மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக புகார் எழுந்தது. மேலும் இது தொடர்பாக பல்வேறு காவல்நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டதையடுத்து சவுக்கு சங்கரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 அப்போது அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சென்னை காவ்லதுறை ஆணையர் உத்தரவின் பேரில் வழக்கு பதியப்பட்டது. இதை எதிர்த்து சவுக்கு சங்கின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  , கடந்த 9ம் தேதி சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது

தற்போது தேனி நகர காவல் ஆய்வாளர் உதயக்குமார் தலைமையிலான அதிகாரிகள், கஞ்சா வைத்திருந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சவுக்கு சங்கர்  புழல் சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு சவுக்கு சங்கர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட உத்தரவு நகல் சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு உள்ளது.