சென்னை

திமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியிருந்தார்.  எனவே இது க்றித்து திமுக பிரமுகர் புகார் ஒன்றை அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சிவி சண்முகம் மீது இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன.

மேலும்முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும் சி.வி. சண்முகம் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தன் மீது திண்டிவனம் மற்றும் விழுப்புரம் நகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி. சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்குகள் மீதான விசாரணை நடைபெற்ற வந்த  நிலையில் அமைச்சர் மீது போடப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.