சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி  சம்போ செந்திலை பிடிக்க தமிழ்நாடு அரசின் காவல்துறை, தேசிய தகவல் மையத்தின் உதவியை நாடி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியாக உள்ள வழக்கரிஞர் அஸ்வத்தாமன் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், முன்னாள் பார் கவுன்சில் தலைவராக இருந்த பாஜக துணைத்தலைவர் பால் கனகராஜிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து, இந்த கொலையில் முக்கிய குற்றவாளயிக கருதப்படம் சம்போ செந்திலை கைது செய்ய சென்னை காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது.

சம்போ செந்திலின் இருப்பிடத்தை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, சம்போ செந்திலின் இருப்பிடத்தை கண்டறிய தேசிய தகவல் மையத்தின் உதவியை சென்னை போலீஸ் நாடியுள்ளது. சம்போ செந்திலின் கூட்டாளி ஈஷாவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து,   ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டிய விவகாரத்தில் சம்போ செந்தில் சீசிங் ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த ஓராண்டாக தனது கூட்டாளிகளிடம் இண்டர்நெட் கால் மூலம் பேசி வந்தது விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து தெரிவிக்க தேசிய தகவல் மையம் உதவுகிறது.

கடந்த ஜூலை 5-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 23 நபர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது. மேலும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் எழுதியது சம்பந்தமாக கடலூரைச் சேர்ந்த தனியார்ப் பள்ளி தாளாளர் அருண்ராஜ் என்பவரைச் செம்பியம் காவல்துறை கைது செய்தது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்டார். மேலும் குற்றவாளிகளில்  ஐந்து நபர்களை ‘போலீஸ் கஸ்டடி’யில் எடுத்து செம்பியம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்ய மூளையாக செயல்பட்டது யார் என்ற விடையை கண்டுபிடிக்க மூன்றாவது முறையாக கஸ்டடியில் எடுத்து துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் கொலைக்கு முக்கிய நபராக பார்க்கக்கூடிய அருள் என்பவரிடம் விசாரணை மேற்கொண்ட போது செல்போனில் அடிக்கடி ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரன் என்பவரின் மகனும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான வழக்கறிஞருமான அஸ்வத்தாமனிடம் பேசி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து  இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் வழக்கறிஞர் அஸ்வத்தாமனும் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கடந்த ஆண்டு சோழவரம் பகுதியில் நிலம் தொடர்பான தகராறில் பணம் கேட்டு தொழிலதிபரை மிரட்டிய சம்பவத்தில் அஸ்வத்தாமனுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இடையே நேரடி பகை ஏற்பட்டுள்ளது. அஸ்வத்தாமன் தொழிலதிபரிடம் துப்பாக்கியை காட்டி ஆம்ஸ்ட்ராங்கையும், உன்னையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஆம்ஸ்ட்ராங் மற்றும் அஸ்வத்தாமனுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்ட நிலையில், அஸ்வத்தாமனின் முக்கிய பிசினஸான புறநகர் சென்னை ஸ்கிராப் பிசினசிலும் ஆம்ஸ்ட்ராங் கட்டபஞ்சாயத்து செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அதுபல,  சென்னை தீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலிலும் வழக்கறிஞரான அஸ்வத்தாமனுக்கும் ஆம்ஸ்ட்ராங்கும் இடையே மோதல் ஏற்ட்டதாகவும் போலீசர் தெரிவிக்கின்றனர். இதே போல பல கட்ட பஞ்சாயத்துகளில் ஆர்ம்ஸ்டாங் தலையிட இந்த விவகாரம் அஸ்வத்தாமனின் தந்தையும் வேலூர் சிறையில் உள்ள ரவுடியுமான நாகேந்திரனுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரோலில் வந்த நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங்விடம் செல்போனில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது, முடியாது எனக்கூறி தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே பொன்னை பாலு மற்றும் அருள் ஆகியோர் 5முறைக்கு மேல் வழக்கறிஞர் அஸ்வத்தாமனை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தின் போது வழக்கறிஞர் அஸ்வத்தாமன் வெளிநாட்டிற்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பின்பு நடத்தப்பட்ட 16ஆம் நாள் நினைவு வேந்தல் காங்கிரஸ் நிகழ்ச்சியை அஸ்வத்தாமன் தலைமையில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து தற்போது தலைமறைவாக உள்ள சம்போ செந்தில்,  சீசிங் ராஜாவை காவல்துறை தேடி வருகிறது