சென்னை

ன்று முதல் செனையில் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக தாழ்தளப் பேருந்து சேவை தொடங்கப்படுகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு வரை சென்னை நகரில் தாழ்தள சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்த பேருந்துக்கள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறும் வகையில் இந்த பேருந்துகள் இருந்தன. 2018க்கு பிறகு தாழ்தள சொகுசு பேருந்துகள் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குரித்து மாற்றுத்திறனாளி உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு சார்பில், முதலில் தாழ்தள சொகுசு பேருந்துகளுக்கு அதிக செலவு ஆவதோடு, தாழ்வான படிக்கட்டுகளால் மழை நீர் எளிதில் புகும் என்பதாலும் குறுகலான சாலைகளில் இயக்குவது சிரமம் என்பதால் இந்த பேருந்துகளை வாங்கவில்லை என்று வாதிடப்பட்டது.

ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் தாழ்தள சொகுசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதாவது குறைந்தபட்சம் 350 பேருந்துகளை இயக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம்உத்தரவிட்டதால், தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது.

சென்னை நகரில் இன்று முதல் தாழ்தள மாநகரப் பேருந்து சேவைகள் தொடங்கப்பட உள்ளன. இதில் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏற வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன பேருந்தொ; ஏறும் படிக்கட்டுகல் உயரம் குறைவாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.  இந்த பேருந்தில் தாழ்தள உயரத்தை இடதுபுறத்தில் சாய்த்து மிக எளிதாக ஏறி, இறங்க பேருந்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.